பரமத்தி வேலுர் வெற்றிலை சந்தையில் வெற்றிலை விலை உயர்வு ....

பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தையில்  வெற்றிலை வரத்து குறைந்ததால்  வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளது.

Update: 2024-04-01 11:19 GMT

வெற்றிலை

பரமத்திவேலூர் சுற்று வட்டார  பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை  இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500- க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நேற்று  நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று  ரூ.8 ஆயிரத்திற்கும் கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 200- க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று  ரூ. 1,800- க்கும் ஏலம் போனது. வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News