மூரார்பாது அரசு பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவ போட்டி

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன

Update: 2023-12-12 07:53 GMT

மூரார்பாது அரசு பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவ போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு மூரார்பாது அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவ போட்டிகள் நடந்தது.கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கி பாரதியின் படைப்புகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார். தொடர்ந்து நடந்த இந்திய மொழிகள் உற்சவப் போட்டியில் பாரதியின் பாடல்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி ரோட்டரி இயக்குனர் அம்பேத்கார் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வேலுசாமி, ஆசிரியர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News