துபாயைப் போல் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு

Update: 2023-10-20 16:32 GMT

மாநாடு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாய் நகரில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.  இதில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசும் போது, துபாய் நகரில் தமிழ் முனைவோர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் துபாய் நகரைப் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் தமிழக முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசே மிகவும் முக்கிய காரணம் ஆகும்.  இத்தகைய வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News