இடைநிலை ஆசிரியர்கள் திங்கள் முதல் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வராததால் தமிழகத்திலுள்ள மாவட்ட தலைநகரங்களில் 26.02.2024 திங்கள் முதல் போராட்டம் நடைபெறும்.

Update: 2024-02-23 15:31 GMT

இடைநிலை ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதிய" தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றக்கோரி கடந்த ஐந்து நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், வரும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

மேலும் இதுவரை அரசு அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்ல திட்டம். இரண்டொரு நாளில் அழைத்துப் பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26 முதல் மாநில தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டமும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கைதாகும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை அழைத்துப் பேசி முடிவு செய்யாததை கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களிலும் (முதன்மை கல்வி அலுவலகத்தில்) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

போராட்டத்தை இன்னும் தீவிரமாகாமல் தமிழக அரசின் முதல்வர் அழைத்து பேசி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தர என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்.

Tags:    

Similar News