தாட்கோ திட்டத்தில் வங்கி கடன் விண்ணப்பதாரரிடம் நேர்காணல்
தாட்கோ உதவி மேலாளர் தாட்சாயிணி, மகளிர் திட்ட உதவி இயக்குனர் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்
Update: 2023-12-15 05:55 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ மாவட்ட மேலாளர் பியர்லின்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ரங்கநாதன், தாட்கோ உதவி மேலாளர் தாட்சாயிணி, மகளிர் திட்ட உதவி இயக்குனர் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அருண்குமார் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தினர்.