அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா புரட்சி பாரதம்?

விரும்பிய தொகுதிகளை அதிமுக ஒதுக்காததால் அதிருப்தியடைந்துள்ள புரட்சி பாரதம் கூட்டணியலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-21 01:43 GMT
அதிமுக கூட்டணியில் விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் அந்தக் கட்சி அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் பெறப்பட்டுல்லது. விழுப்புரம் தொகுதியில் அதிமுகவினர் நேரடியாக களமிறங்கக்கூடிய நிலையில் திருவள்ளூர் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதா அல்லது வாபஸ் பெறுவதால் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News