மன்னார் வளைகுடாவின் கடற்கரை பகுதிகளின் பிராந்திய பெயரா?

’கொற்கை' பிராந்திய பெயரா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-07-03 10:04 GMT

’கொற்கை' பிராந்திய பெயரா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார்.


கொற்கை' என்பது மன்னார் வளைகுடாவின் கடற்கரை பகுதிகளின் பிராந்திய பெயரா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "18ம் நூற்றாண்டினை சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு மற்றும் வரைபட அறிஞர் திரு.ராபர்ட் ஓரம் (1728—1801) கேரளா-திருவனந்தபுரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவர் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்திற்காக பொ.ஊ.1775ல் அப்போதைய நிலப்பரப்புகளையும், நதி நீர் ஆதாரங்களையும் தெளிவாக விளக்கும் வகையில் கோதாவரி-கன்னியாகுமரி என்ற தலைப்பில் வரைபடம் வரைந்துள்ளார் என்றும், அதனை தொடர்ந்து தங்களால் முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பழய ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் பொ.ஊ.1778ல் ஓர் ஒப்பீடு வரைபடம் கொல்லிடம் - கன்னியாகுமரி என்ற தலைப்பில் வரைந்ததாக தன்னால் அறியப்படுகின்றது என்று தெரிவித்தார் என்றும், ஒரே நபரால் சுமார் 3 ஆண்டுகள் இடைவெளியில் வரையப்பட்ட இந்த இரு வரைபடங்களையும் சற்று கூர்ந்து கவனித்தால் 1. பெரியபட்டிணம் - கீழக்கரை- கோரைக்குட்டம் பகுதி 2. கீழபட்டிணம் (பட்டிணமருதூர்) - கல்லூரணி 3. காயல்பட்டிணம் – சாகுபுரம் இந்த மூன்று துறைமுகங்களையும் ஆதாரங்களாக கொண்டு சிறந்த வணிக பிராந்தியமாக விளங்கிய பகுதியே 'கொற்கை' என அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், சான்றாக அக்கா சாலை 'ஸ்ரீ ஈஸ்வரமுடைய நாயனார்' ஆலய கல்வெட்டில் 'கொல்கை மதுரோதைய நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த 'கொற்கை' பிராந்தியத்தின் கீழ் இருந்த பகுதியாக அக்காசாலையினை கருதலாம் என்றும், இந்த மூன்று பகுதியிலும் முறையே வைகை, வைப்பார், பொருநை (தாமிரபரணி) நதிகளின் முகத்துவாரத்தில் சாவி காடி (Dry Dock Place) போன்ற பெரிய நீர்த்தேக்க நிலப்பரப்புகள் காணப்படுகின்றன.

இத்தகைய சாவி போன்ற அமைப்பானது கடல் கலன்களில் (நாவிகளில்) சரக்குகளை எளிதாக கையாள ஏதுவாக செயற்கையாக உருவாக்கப்பட்ட அமைப்புகளாக தென்படுகின்றன என்றும், இவைகள் நம் பாண்டிய மன்னர்களின் ஆட்சி, கலாச்சார மேன்மை, வணிகநுட்ப மற்றும் மதிநுட்ப திறமைகளை பற்றிய பொ.ஊ.1292ல் இப்பகுதிக்கு வந்திருந்த திரு.மார்க்கபோலோவின் கூற்றுகளின் உண்மை தன்மைக்கு சான்றுகளாக உள்ளன என்றும் தனது புரிதல்களை பதிவு செய்தார். மேலும், தற்போதைய பூகோள அமைப்பின்படி பார்த்தாலும், பொ.ஊ. 1775ம் ஆண்டு வரைபடத்தின் படி பார்த்தாலும் இத்தகைய சாவி போன்ற அமைப்புகளான காரைக்குட்டம், கல்லூரணி, சாகுபுரம் போன்ற துறைமுக பகுதிகள் நிறப்பப்பட்டு சமதள பூமிகளாகிவிட்டன என்பது புலனாகின்றது என்றும், குறிப்பாக கல்லூரணிக்கு தெற்கே தற்போதைய தருவைக்குளம் பகுதியில் சங்கமித்த மலட்டாறினை காணப்படவில்லை என்றும், இந்த மலட்டாறின் தடமானது தற்போதைய கங்கைகொண்டானில் திரும்பி தெற்காக சென்று சீவலப்பேரியில் தாமிரபரணியோடு சங்கமம் ஆகின்றது என்றும், இத்தகைய நிலப்பரப்புகள் மாற்றம் 14-15ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் தனது புரிதல்களை பதிவு செய்தார்.

இந்த மூன்று பகுதிகளுக்கும் தெற்கு பகுதியில் கடற்கரை அருகில் ‌‌முருகன் ஆலயம் முறையே கீழக்கரை, வேப்பலோடை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன என்பது வியப்பாக உள்ளது. இவற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி - சாகுபுரம் (DCW) கடற்பகுதியில் முனைவர்.த.தவசிமுத்து அவர்களால் தொன்மையான தெய்வத் திருமேனிகளும், வரலாற்று பொக்கிஷங்களும் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்றும், இது தொடர்பாக மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களாக உள்ளன.

தற்போதைய பட்டிணமருதூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட, காணப்படுகின்ற வரலாற்று சிதைவுகள், சின்னங்கள் அடிப்படையில் தான் பிரதான மந்திரி அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், எமது மாவட்ட ஆட்சியரின் முறையான வழிகாட்டுதலினால் இந்திய தொல்லியல் துறையின் -திருச்சி அதிகாரிகள் 04.12.2023 முதல் தொடர்ந்து பல கட்டங்களாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், இந்த பட்டிணமருதூருக்கு அடுத்த 'கல்மேடு' கிராமத்திலுள்ள அணைக்கட்டினை பலப்படுத்தும் பொதுப்பணித்துறையின் பணியின் போது தோண்டப்பட்ட 10அடி ஆழ பள்ளத்தில் 7அடிக்கு கீழே காணப்படும் 200அடி நீளம் கொண்ட சிற்பங்களோடு கூடிய கல் கட்டுமான மதில் சுவற்றினை முறையாக ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சியரால் இந்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய மதுரை- ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திலுள்ள ஸ்ரீ பக்தலிங்கம் சன்னதிக்கு நேர் எதிரேயுள்ள பெரிய கல்தூணில் வடிவமைக்கப்பட்டுள்ள சுமார் 1அடி உயரமுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சிற்பத்தின் அமைப்பினை 90% ஒத்த அமைப்பில் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கும், இரு கைகளும் இல்லாமல் பல துண்டுகளாக சிதைவுற்ற நிலையிலுள்ள மூலவரின் தெய்வத்திருமேனியையும், பல தொன்மையான சிற்ப குறியீடுகளையும், பழங்கால ஆபரணங்களையும் கொண்ட பட்டிணமருதூர் -ஸ்ரீ வடக்குவாச் செல்லிஅம்மன் ஆலயத்தின் உண்மை வரலாற்றினை ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சியரால் இந்திய தொல்லியல் துறை/தமிழக தொல்லியல்துறை இரண்டிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் தனது புரிதல்களை பதிவு செய்தார். இந்த பகுதியில் பட்டிணமருதூர் மற்றும் வேப்பலோடை கண்மாய்களில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான 'குமிழிதூம்பு' தன்னால் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு வரலாற்று தொன்மங்கள் குவிந்து காணப்படும் இந்த பகுதிகளை முழுமையாக, ஒற்றுமையாக ஆராய்ந்தால் நமது தமிழர்களின் மிக மிக தொன்மையான (கபாடபுரம்/மூதூர்) தொடர்பான சான்றுகள் நிச்சயமாக கிடைக்கப்பெறலாம் என்பது தனது நம்பிக்கை என்றும், 14.06.2024) தான் கண்டறிந்த இந்த திரு.ராபர்ட் ஓரமின் பொ.ஊ.1775ம் ஆண்டு வரைபடமும் தனது ஐயப்பாடினை மேலும் உறுதிபடுத்தி தனது கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகின்றது என தனது வரலாற்று புரிதல்களை கருத்துக்களாக பதிவு செய்தார்.

Tags:    

Similar News