நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக பெய்து வரும் கனமழை!
Update: 2023-11-14 05:22 GMT
கனமழை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ., கடலூரில் 12 செ.மீ., பரங்கிப்பேட்டை 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.