'அப்படி பேசியது தவறு தான்' 'போலீஸ் துன்புறுத்தவில்லை' - சரணடைந்த சவுக்கு !

Update: 2024-05-17 13:36 GMT

சவுக்கு சங்கர்

பெண் போலீசார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தவறுதான். நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், தவறை உணர்ந்துவிட்டேன் என காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவதூறு வழக்கில் யூ-டியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸார் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது போலீஸ் விசாரணையில் நான் துன்புறுத்தப்படவில்லை, சிறையில் எனக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது, எனக்கு மருத்துவ உதவி தேவை என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தவறுதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாகவும் தெரிகிறது.

 

Tags:    

Similar News