அம்மாப்பேட்டையில் துணிகரம்... ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

அம்மாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-05 09:46 GMT

அம்மாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் கணசேன் ( 54), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை அருகில் உள்ள மகன் நடத்தி வரும் செல்போன் கடைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததை அறிந்த அவர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கைரேகையினை பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News