சேலத்தில் பிரபல நகைக் கடையில் 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

சேலத்தில் பிரபல நகைக் கடையில் 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது.

Update: 2023-12-04 10:26 GMT

சேலத்தில் பிரபல நகை கடையில் 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அஸ்தம்பட்டி சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (38) இவர் சொர்ணபுரி பகுதியில் தங்க நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அடுத்த தாத்தவராயன் குட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் தனபால் (28) என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனபால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 1ஆம் தேதிக்குள் கடையில் இருந்த செயின், வளையல், நெக்லஸ், தாலி செயின் உள்பட மொத்தம் (380 கிராம்) ரூபாய் 24லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் முரளி பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News