கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு: ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு , ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2024-06-20 06:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.