கள்ளக்குறிச்சி விஷ சாராயம் : மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர்கள் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் மாதவரத்தை சேர்ந்த கெமிக்கல் ஆலையில் மெத்தனால் பெறப்பட்டது கண்டறியப்பட்டு ஆலை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-25 01:43 GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News