தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி எம்பி போட்டி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கனிமொழி கருணாநிதி எம்பி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Update: 2024-03-18 09:21 GMT

கனிமொழி எம்பி 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக கனிமொழி கருணாநிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 17 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட இப்போது தூத்துக்குடியில் தங்கி இருந்து மக்களுடன் மக்களாக இருந்து மக்கள் பணியாற்றி வந்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கனிமொழி கருணாநிதி நேரடியாக சென்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஆகையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது ஆகையினால் மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி கருணாநிதி எம்பி களமிறங்கினால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுக வட்டாரங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் மீண்டும் கனிமொழி கருணாநிதி எம்பி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி எம்பி தான் போட்டியிட வேண்டுமென திமுகவினர் 80கும் மேற்பட்டோர் விருப்பமான தாக்கல் செய்துள்ளனர்.

ஆகையினால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி எம்பி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

மேலும் தூத்துக்குடி உள்ள அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் தற்போது கனிமொழி கருணாநிதிக்காக பாராளுமன்ற தொகுதியின் தங்கள் பணியை துவங்கியுள்ளனர்.

Tags:    

Similar News