கனிமொழி எம்பியிடம்காலில் விழுந்து பெண் கோரிக்கை மனு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம்பியிடம் காலில் விழுந்து பெண் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-03-04 12:26 GMT

கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி யிடம் காலில் விழுந்து பெண் கோரிக்கை மனு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்க வருகை தந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி யிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் பொதுக்கூட்டத்தில் மனு அளிக்க வருகை தந்த பொதுமக்கள் மனுக்களை கனிமொழி கருணாநிதி எம்பி யிடம் வழங்கினார். அப்போது ஒரு பெண் கனிமொழி எம் பி காலில் விழுந்து தன் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது எம்பி மனுவை பெற்று கொண்டு அவரிடம் தங்கள் கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை ஆட்சியர் எடுப்பார் என அவரிடம் தெரிவித்தார். இதுபோல் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை தனக்கு மருத்துவ செலவும் மாதம் அதிகமாக ஆகிறது தனக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் அப்போது தங்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என எம்பி அவரிடம் வாக்குறுதி அளித்தார்.
Tags:    

Similar News