டிராக்டரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிராக்டரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்டார் கனிமொழி எம்.பி.,.

Update: 2023-12-21 15:25 GMT

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிராக்டரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்டார் கனிமொழி எம்.பி.,.

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிராக்டரில் சென்று கனிமொழி எம்.பி.,நிவாரணப் பணியில் ஈடுபட்டார். தூத்துக்குடி அதி கனமழை காரணமாக மாப்பிள்ளையூரணி, இந்திரா நகர், தலைமுத்துநகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்களுக்கு டிராக்டரில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவர்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து,நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உடனிருந்தார்.
Tags:    

Similar News