மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!

மேல்மாயில் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-04-03 07:13 GMT

 பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2023-24-ம் கல்வி ஆண்டு யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தாளாளர் பெ.குருநாதன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பூங்கோதை குருநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் எம்.கருணாமூர்த்தி வரவேற்றார். பனமடங்கி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.என்.வெங்கடேசன் சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார். பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.பவித்ரா, லோகேஷ், மகேஷ், துணை முதல்வர் சம்பத்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை டி.தீபிகா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியை பி.ஜெயந்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News