கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் விழா!

பில்லாச்சி கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-05-01 13:38 GMT

கூழ்வார்க்கும் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கங்கை அம்மனுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் சாமிக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், கூழ்வார்த்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.இதனையொட்டி நகராட்சி கவுன்சிலர் ஆஞ்சநேயன் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News