ஆற்காட்டில் ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் உள்ள ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-04-23 10:15 GMT

கோப்பு படம் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி குளோபல் பள்ளியில் ஞான விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திமிரி தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் சதாசிவம், துணைத்தலைவர் நமசிவாயம், புலவர்கள் ராமதாஸ், அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு திருள்ளுவர் சிலைக்கு வழிபாடு செய்து மாலை அணிவித்து, திருவள்ளுவரின் புகழை விளக்கி பேசினர்.

ராணிப்பேட்டை சிப்காட் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்தனர்.விழாவில் நர்சிங் கல்லூரி முதல்வர் சிவசக்தி, அகாடமிக் பொறுப்பாளர்கள் மஞ்சுநாத், பிரமிளா, பள்ளி முதல்வர் சுவேதா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் கோமதி பாலாஜி, இணைச்செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News