குரும்பர் மக்களை பழங்குடி பட்டியலில் விரைந்து சேர்க்க வேண்டும் - தர்மபுரி எம்.பி
குரும்பர் மக்களை பழங்குடி பட்டியலில் விரைந்து சேர்க்க வேண்டும்.தர்மபுரி எம்.பி டாக்டர். செந்தில்குமார் கோரிக்கை;
குரும்பர் மக்களை பழங்குடி பட்டியலில் விரைந்து சேர்க்க வேண்டும்.தர்மபுரி எம்.பி டாக்டர். செந்தில்குமார் கோரிக்கை
குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் ஆகிய மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் தமிழ்நாடு அரசின் முன்மொழிவை விரைவுபடுத்தவும் மற்றும் “லம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தா்மபுரி பாராளுமன்ற உறுப்பினா் மருத்துவா் செந்தில்குமார், ஒன்றிய பழங்குடி நலன் அமைச்சர் அர்ஜூன் முண்டாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். அம்மனுவில் பழங்குடி சமூகமான 'குருமன்ஸ்' என்ற பழங்குடி சமூகத்தின் ஒத்த சொற்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் அங்கீகரித்து இணைப்பதற்கான நீண்டகால முயற்சி தொடர்பாக எழுதுகிறேன். S.T பட்டியலில் குறும்பர் (S.T) என்ற பெயருக்கு இணையான பெயராக குருமா, குருமன், குரும்பன், குரும்ப கவுண்டர், குறும்பன் மற்றும் குரும்பர் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தின் சார்பாக நான் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் பல முறை முயற்சிகளை எடுத்துள்ளேன். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல வாரியம் இயக்குநர், டிஆர்சி, ஊட்டி ஆகியோருக்கு, தேவையான அறிக்கைகளை உங்கள் அலுவலகத்திற்கு விரைவாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள லம்பாடிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியல் சமூகத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் லம்பாடி மக்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 2 லட்சம் ஆகும். அவற்றில் தர்மபுரியில் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 50,000 மக்கள் அரூர் (சிட்லிங்கி தண்டா, சிட்லிங்கி பஞ்சாயத்து), பென்னாகரம் மற்றும் தர்மபுரி தாலுகா மற்றும் மேட்டூர் தாலுகாவில் (லக்கம்பட்டி) வசித்து வருகின்றனர். சென்னை பல்கலைக்கழக மானுடவியலாளர்கள் நடத்திய மானுடவியல் ஆய்வின் அடிப்படையில் லம்பாடிகளை ST பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் இணைத்து அமைச்சர் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளார். குருமா, குருமன், குரும்பா, குரும்பகவுண்டர், குரும்பன், குரும்பர் மற்றும் லம்பாடி சமூகத்தை ஆகிய பெயர்களை ST பட்டியலில் இணைத்திருப்பது வெறும் அடையாளச் செயலாக இல்லாமல், வரலாற்று அநீதிகளை சரி செய்வதற்கான ஒரு படியாகும். உங்கள் உடனடி நடவடிக்கை சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கும், சமூக கட்டமைப்பில் அவர்களின் சரியான இடத்தைப் பெற வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.