புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-29 07:49 GMT

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அரியலூர் ஜுன். 29- இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன.

இச்சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஜீரோ எஃப்.ஐ.ஆர், ஆன்லைனில் போலீஸ் புகார்களை பதிவு செய்தல், மின்னணு முறைகள் மூலம் சம்மன் அனுப்புதல் மற்றும் விசாரணை கைது உள்ளிட்டத்திற்கு காவல்துறைக்கு அதிக அளவு அதிகாரம் அளித்தல் போன்றவை இச்சட்டத்தின் முக்கிய அம்சமாக மத்திய அரசு கூறினாலும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவர் என பல தரப்பினருக்கும் இச்சட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் கொண்டு வரப்பட உள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் வரும் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களை தினந்தோறும் முற்றுகை இடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News