தேர்தல் அன்று ஊழியர்களுக்கு விடுப்பு

தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-04-11 01:03 GMT
தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது, கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குபதிவு செய்யும் வசதி வழங்க கோரி மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தெற்கு ரயில்வேவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பிதுள்ளது.
Tags:    

Similar News