ஊட்டியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஊட்டியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-08 11:34 GMT

 ஊட்டியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 126வது மலர் கண்காட்சி, மே-10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதே நாட்களில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலர் கண்காட்சியையொட்டி 10ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில்‌, வரும் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 126-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால்‌, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில்‌ மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலகங்கள்‌, அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும்‌ பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன்‌ செயல்படும்‌. 10ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 18ம் தேதி சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News