மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது!!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது.

Update: 2024-09-23 10:44 GMT

cyclone

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மாக பெய்துள்ளது. பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை திரும்ப பெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன. இந்த நிலையில் ஆந்திரா கடற்கரையில் இருந்து தென் கடலோர மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று தென்கடலோர மியான்மர் பகுதியிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது. அது தாமதமாகும் சூழல் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 28-ந் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், கடலில் காற்று பலமாக வீசும் என்றும் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News