அடித்தட்டு மக்களும் இடஒதுக்கீட்டால் பயனடைய வேண்டும் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ஒரு சாதிக்குள் இருக்கும் அனைத்து உட்பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்தி , அவர்களை ஒரே சாதிப் பிரிவாக கணக்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Update: 2024-06-27 05:55 GMT

ஈஸ்வரன் எம்.எல்.ஏ 

சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், ஒவ்வொரு சாதியும் பல பிரிவுகளாக உள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் 14 பிரிவுகளையும் இணைத்து அவர்களை கொங்கு வேளாளர் என்று குறிப்பிட்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார் கருணாநிதி. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ஒரு சாதிக்குள் இருக்கும் அனைத்து உட்பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்தி , அவர்களை ஒரே சாதிப் பிரிவாக கணக்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒரு சமூகத்திற்குள் குறிப்பிட்ட சிலரே பலனடையும் வகையில் இல்லாமல் ஒரு சாதியில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News