175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டம் !

Update: 2024-05-27 07:25 GMT

மதிய உணவு திட்டம் 

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News