பச்சை குத்தும் கடையில் பணத்தை திருடியவர் கைது

திருச்செந்தூர் கோவில் அருகே பச்சை குத்தும் கடையில் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2024-06-16 14:07 GMT

கைது

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்த கமல் மகன் ஏழுமலை (21) என்பவர் திருச்செந்தூர் விடலை பிள்ளையார் கோவில் அருகே பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த கடைக்கு பச்சை குத்துவதற்காக வந்த விருதுநகர் மாவட்டம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் பாலமுருகன் (எ) பெத்துராஜ் (29) கடையில் இருந்த ரூ.500 பணத்தை திருடி கையும் களவுமாக பிடிபட்டார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் (எ) பெத்துராஜை கைது செய்து, திருடப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News