வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மன்சூர் அலிகான்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-21 01:39 GMT

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


திரைப்பட நடிகரான மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை துவங்கி அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். முதலில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தவர் பின்னர் தொகுதி மாறி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்களின் முதல் நாளில் (20.03.2024) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேட்ச்சையாக போட்டிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News