மாசித் திருவிழா 3ம் நாள்: சுவாமி வீதி உலா!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 3ம் நாளில் சுவாமி முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

Update: 2024-02-17 09:59 GMT

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 3ம் நாளில் சுவாமி முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த (பிப். 14) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ஆம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். 

பின்னா், மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா். மாசித் திருவிழாவின் 4-ஆம் நாளான இன்று காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. பின்னா், மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News