மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸ் வெப்பம் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.;

Update: 2024-04-10 08:41 GMT

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.


தமிழகம்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவியது, மழை அளவு எதுவும் பதிவாகவில்லை. தமிழகத்தில்  அதிகபட்ச வெப்பநிலை ஒருசில  இடங்களில் 2° – 4° செல்சியஸ் குறைவாக இருந்தது. இதர தமிழக பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில்  பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி  பகுதிகள் மற்றும்  தென் தமிழகத்தில் ஒருசில  இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.    அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ் மற்றும்  ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி  பகுதிகளில் 37° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33° – 37° செல்சியஸ்,   புதுவையில் 34.5° செல்சியஸ்,    காரைக்கால் பகுதியில் 33.6° செல்சியஸ்   மற்றும் மலைப்பகுதிகளில் 22° – 30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. 

சென்னை மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5° செல்சியஸ்   பதிவாகியுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 12 ஆம் தேதி தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 15 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 16 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று முதல் 14 ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில  இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்றும் நாளையும், அதிகபட்ச  வெப்பநிலை தமிழகத்தில்  ஒருசில  இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்   33°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News