ஆணும், பெண்ணும் சமூகத்தில் சமமாக இருக்கணும் -நடிகை ரேவதி

சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமமாக செயல்பட வேண்டும்; அப்போதுதான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என நடிகை ரேவதி கூறினார்.

Update: 2024-03-08 16:23 GMT

சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமமாக செயல்பட வேண்டும்; அப்போதுதான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என நடிகை ரேவதி கூறினார்.  

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் மண்டல அலுவலகம் சார்பாக 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இதில் திரைப்பட நடிகை ரேவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ரேவதி, அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக இருக்க வேண்டும், அப்போது தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும், நான் இந்த அளவுக்கு இருக்க என் தாய் தந்தையே காரணம்,ஆண் பெண் வேறுபாடு இல்லாமால் எந்தத் தொழில் வேண்டுமானாலும் இறங்கலாம் என்று பேசினார்.
Tags:    

Similar News