எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம், மாப்பாக்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Update: 2024-01-18 01:48 GMT

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிமுகவின் நிறுவனர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட அம்மா பேரவை இளைஞர் செயலாளர் ஹரிதாஸ், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக அணி இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக ஊர்வலமாக எம்ஜிஆர் திருவுருவப்படத்தை கையில் ஏந்தியவாறு வருகை தந்து கூட்ரோட்டில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு சொரையூர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய செயலாளர் துரையூர் குமார், திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றாமல் மூன்றாண்டு காலம் ஆட்சி செய்து வருவது என குற்றம் சாட்டினார் மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறார்களோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாலமுருகன் முருகேஷ் கணேஷ் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News