பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்

பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தினை இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்

Update: 2024-03-16 00:44 GMT

பைல் படம்

பாரிமுனை தம்பு செட்டித் தெருவில் உள்ள ,அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோடை வெப்பம் துவங்கிய நிலையில் திருக் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து அவர்களை காத்திடும் வகையில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News