பதிவுத்துறையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பணியாற்றி உயிரிழந்த ஏழு பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

Update: 2024-03-02 16:17 GMT

பணி நியமன ஆணைகள் வழங்கல்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News