பெசன்ட் நகரில் பாலாலய நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு

பெசன்ட் நகரில் ரூ 1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளுக்கான பாலாலய நிலையில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

Update: 2024-02-15 11:57 GMT

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (15.02.2024) சென்னை, பெசன்ட் நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர் கயல்விழி ஜெயக்குமார், திருக்கோயில் செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News