ஆயி பூரணம் அம்மாளை சந்தித்த அமைச்சர் உதயநிதி
அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய ஆய் பூரணம் அம்மாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Update: 2024-01-18 05:38 GMT
மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடிமதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உடன் இருந்தார்.