அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகை

நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

Update: 2023-12-25 02:30 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

நெல்லையில் பெய்த கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்க உள்ளார். மேலும் வீடுகள் கால்நடைகளை இழந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News