நடைபாதை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர்

சிறுதொழில் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 1,014 பேருக்கு சிறுவணிகக் கடனுதவி.

Update: 2024-01-13 12:35 GMT

கடனுதவி வழங்கிய அமைச்சர்

பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுதொழில் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 1,014 பேருக்கு சிறுவணிகக் கடனுதவியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, , மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி, திரு.ஆர்.துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணை பொது மேலாளர் திரு.தேவேந்திர குமார், உதவி பொது மேலாளர் திரு.பங்கஜ் குமார் சிங் மற்றும் வங்கிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News