சட்டபேரவையில் மணல் கொள்ளை - வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடைப்பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறையின் நோட்டீஸ் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தை அளித்த போதிலும் அதனை விவாதத்திற்கு ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மறுத்துவிட்டார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு வைத்தார்.;

Update: 2024-06-28 15:41 GMT

வானதி சீனிவாசன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு தொடர்பான தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் இயற்கை வளக் கொள்ளை எவ்வாறு நடைப்பெற்று வருகிறது.  நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அளித்தோம்.

தமிழகத்தில் 4,700 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் கனிம வளக் கொள்ளை நடைப்பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது இதுகுறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தை அளித்த போதிலும் அதனை ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மறுத்துவிட்டார். அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் மணல் கொள்ளை நடைப்பெற்றுள்ளது.

Advertisement

வருமானத்திற்காக டாஸ்மாக் நடத்தப்பட்டு வரும் நிலையில் மணல் அள்ளுவதன் மூலம் அரசுக்கு வருமானம் வராமல் இடையில் உள்ளவர்களே அதனை எடுத்துக் கொள்கிண்ரனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மணற்கொள்ளை குறித்தான அமலாக்கத்துறை நோட்டீஸ் மீது விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்? நீர்வளத்துறை சார்பாக ஒரு கப் அளிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலத்தில் வரும் காலங்களில் இந்த கப்களில் மணலை நிரப்பி இதுதான் மணல் என்று காட்டும் சூழல் ஏற்படானல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News