உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-10 16:31 GMT
பணம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே அரும்பாக்கம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரினை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.55 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆற்காடு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.