தர்ப்பணம் கொடுக்க கட்டணம் , அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் - இ பி எஸ்
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.;
Update: 2024-03-04 01:59 GMT
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் எக்ஸ் தள பதிவில், நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின் , மரியாதையின் வெளிப்பாடாக , மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற கார்ப்பரேட் மனப்பான்மை மூலம் இந்த விடியா திமுக அரசு ஒரு மிகத் தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்பக்காண கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். என பதிவிடப்பட்டிருந்தது.