தாய் உடல் வீட்டிற்குள் புதைப்பு: மகனிடம் போலீஸ் விசாரணை!

தூத்துக்குடியில் பெண்ணின் உடல் வீட்டிற்குள் புதைக்கப்பட்டது தொடர்பாக மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-09 07:27 GMT

தூத்துக்குடியில் பெண்ணின் உடல் வீட்டிற்குள் புதைக்கப்பட்டது தொடர்பாக மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயின் உலாபின் மனைவி ஆஷா பைரோஸ் (44). இவரது கணவர் இறந்து விட்டார். மகன் முகமது குலாம் காதர் (22) என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அய்யனடைப்பு வி.ஏ.ஓ., எட்வர்ட் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முகமது குலாம் காதரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், கடந்த 2ஆம் தேதி தனது தாய் ஆஷா பைரோஸ் இறந்து விட்டதாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் நானே தாயின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டு புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ் உடல் இன்று பிற்பகலில் தாசில்தார் பிரபாகரன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக நெல்லையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணம் எய்தினாரா? என்பது தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News