கோடம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

சென்னை கோடம்பாக்கத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

Update: 2024-04-16 03:27 GMT

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நேற்று கோடம்பாக்கம் மண்டலம் அலுவலகம் அருகில், காமராஜர் காலனி சென்னை நடுநிலைப் பள்ளி விளையாட்டுத் திடலிலிருந்து நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ. பிரவீன் குமார், மண்டல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News