நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி எம்.பி

கனிமொழி கருணாநிதி எம்.பி நாளை விருப்பமனு அளிக்க உள்ளார்.;

Update: 2024-03-04 16:25 GMT

கனிமொழி எம்பி 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவின் விருப்பமான மனு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு முடிந்துள்ளது. போட்டியிட விரும்புவோர் மனுக்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை விருப்ப‌ மனுவை அளிக்கவுள்ளார்.

Tags:    

Similar News