எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-04-25 02:22 GMT

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான 23 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து செய்யபட்டுவிட்டது, சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தேவைபடும் போது நேரில் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ஜி.ஜெயசந்திரன்.
Tags:    

Similar News