''என் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் என் மகனுக்கு எப்போதும் உண்டு''- எஸ்.ஏ.சந்திரசேகர்!

Update: 2024-05-29 09:56 GMT

எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியுள்ள நிலையில், தனது வாழ்த்துகளும் ஆசீர்வாதமும் அவருக்கு எப்போதும் இருக்கும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை கடந்த மே மாதம் 27ஆம் தேதி சந்தித்தார். இது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவி ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில் எஸ்.ஏ சந்திரசேகர், என் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் என் மகனுக்கு எப்போதும் உண்டு என்றார்.

மேலும் விஜய்யின் அரசியலில் தற்போது நீங்கள் ஈடுபாடு காட்டாமல் இருப்பது ஏன் என கேள்வி கேட்கப்பட்டதற்கு, நான் எப்போதும் ஈடுபாடுடன் தான் இருக்கின்றேன் என்றார் எஸ்.ஏ சந்திரசேகர். அப்போது அவர்களுடன் பக்தர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News