நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம். செல்வராசு காலமான செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

Update: 2024-05-14 02:25 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்..செல்வராசு ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்து இளமை பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், மக்களவை தேர்தலில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பை பெற்றவராகவும் திகழ்ந்தார்.  பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக காலமெல்லாம் உரிமைக் குரல் எழுப்பிய போராளி. இத்தகைய கொள்கை பற்றாளராக விளங்கிய தோழர் எம். செல்வராசு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags:    

Similar News