கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜை

கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜையை முன்னிட்டு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

Update: 2023-12-09 05:15 GMT

கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜையை முன்னிட்டு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது.

ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந் தேதி நவசண்டி யாகம் தொடங்கியது. நேற்று 3-வது நாளாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், சப்தசதி பாரயண ஹோமம், 13 அத்தியாய ஹோமம், சுஹாசினி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

மேலும் நவசண்டி யாகம் நடைபெறும் நாட்களில் கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. முதல்நாள் யாகமானது அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி வரை இந்த சண்டி யாகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News