நீட் வினாத்தாள் கசிவு - 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!

Update: 2024-07-18 05:55 GMT

நீட் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீட் முறைகேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் 3 எய்ம்ஸ் மருத்துவர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய மொபைல் போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பீகாரில் 17 மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News