போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடக்கிறது. இதையொட்டி தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக மண்டல மேலாண் இயக்குனர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-07 04:57 GMT
அரசு பேருந்து 

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை சங்கங்களுக்கு நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை அறிவித்த ஏஐடிசி, சிஐடியு, எம்எல்எப், ஏ டி பி, ஐ என் டி யுசி, உள்ளிட்ட 27 தொழிற்சங்கங்கள் மற்றும் 8 போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குனர்கள் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை மேற்கொள்ள கடிதம் ஆனது வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று  மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள் மற்றும் மண்டல மேலாளர் இயக்குனர்கள் பங்கேற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News